Tuesday, November 5, 2013

my love

நெடுங்காலமாய் எனக்குள் காதல் ,
தெரியாமலே புதைந்து கிடந்ததடி ..
மீண்டும் உன்னைப் பார்த்ததும் ,
உயிர் தூண்டவே..
இதயம் அறியாமலே,
பறிபோனதே...
புயல் காற்றிலும் தலை பறிபோகிலும்,
இதயம் உன்னைத்தான் சொல்லுதடி ...
நீண்ட கடல் ,
பனி படர்ந்த பாறை,
இடையில் இரைதேடும் பறவையாய் நான் ,
இறக்கைகள் வலித்த போதும் ,
தொடர்கிறது என் பயணம் ,
உன் இதயதோட்டத்தில் ஒரு வீடு கிடைக்குமென்று ,
கரை கடந்தால் நீ எனக்கு காட்டுவது ,
கல்லறைத் தோட்டமென்றால் ,
இப்பவே சொல்லிவிடு ,
இறந்து விடுகின்றேன் மீன்களுக்கு இரையாக .......

No comments:

Post a Comment